;
Athirady Tamil News

குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரசால் எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?: ஸ்மிரிதி இரானி கேள்வி !!

0

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது பா.ஜனதா கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்கேவின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெலகாவி மாவட்டம் இண்டல்காவில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி 100 ஆண்டு வாழவேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வயதில் மூத்தவர், ஒரு கட்சியின் பெரிய பதவியில் இருப்பவர், பல பொறுப்புகளை வகித்தவர் இவ்வாறு பேசுவது வெட்ககேடானது. காங்கிரசின் தலைவராக இருந்தாலும் நீங்கள் ராகுல்காந்திக்கு செருப்பாக தான் இருக்கிறீர்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது. குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?. பா.ஜனதா பற்றியும், பிரதமர் மோடியை பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு சொந்த கட்சி பிரச்சினைகளை முதலில் பாருங்கள். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.