;
Athirady Tamil News

உகாண்டா அமைச்சர் பாதுகாவலரால் சுட்டுக்கொலை!!

0

உகாண்டா நாட்டின் தொழிலாளர் துறை ஜூனியர் அமைச்சர் சார்லஸ் எங்கோலா. இவர் ஒய்வு பெற்ற ராணுவ கர்னல். இந்நிலையில் தலைநகரான கம்பாலாவில் வீட்டில் இருந்த அமைச்சர் சார்லசை அவரது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

தனிப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகின்றது. சுட்டுக்கொன்ற பாதுகாவலர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பளத்தகராறு காரணமாக இது நடந்ததாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.