;
Athirady Tamil News

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் – விசாரணைக்கு உத்தரவு!!

0

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் – விசாரணைக்கு உத்தரவு

வரணி மத்திய கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு 3.2 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மைதான புனரமைப்பு நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை என கடந்த 17.05.2023 நடைபெற்ற நிகழ்வில் அங்கஜன் இராமநாதன் அவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணை அறிக்கை தயாரிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, மேற்படி விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.