;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 552 பேருக்கு கொரோனா !!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 405 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1059 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,591 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று 3 பேர், கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என மேலும் 6 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.