;
Athirady Tamil News

சாட்சிய சோடனை உரிமை மீறும் செயல் !!

0

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சில காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும் என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் இவ்வாறு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதற்தடவையாக உள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களின் குறைகளை கண்டுபிடிக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சியாக இருக்கின்றன.

நிறைவேற்றுத்துறைக்கு எதிராக அந்தக் ஆணைக்குழுக்கள் செயற்படும் போது, இவ்வாறான செயன்முறையை செய்கின்றனர்.

நிலையியல் கட்டளைகளில் இந்த செயன்முறைகள் தொடர்பில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். பதிலளிப்பதற்கு தலைவருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அவர் பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முயன்றுள்ளார். இவ்வாறான நிலைமையிலேயே அவரை பதவி நீக்க முயற்சிக்கப்படுகின்றது.

இதேவேளை ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 20 மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதேவேளை கவிஞர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சட்டம் தொடர்பில் ஜெனிவாவிலும் பேசப்படுகின்றது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கில் மூன்று பேரை சீஐடியினர் சாட்சியங்களாக கைது செய்து அவர்களை அச்சுறுத்தினார்கள். இதன்போது ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியங்களை இட்டுக்கட்டினார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் ஆலோசகராக இருக்கின்றது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.