வழமைக்கு திரும்பும் சீன – அமெரிக்க உறவு ; நடைபெற்ற முக்கிய சந்திப்பு!
அமெரிக்க மற்றும் சீன இடையேயான உறவை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
அந்தவகையில், கிழக்கு ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணையமைச்சர் டேனியல் கிரிட்டன்பிரின்க் (Daniel Kritenbrink) மற்றும் சீன வெளியுறவுத் துணையமைச்சர் மா சாவ்க்சூ (Ma Zhaoxu) இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வெளிப்படையான, பயனுள்ள கலந்துரையாடலாக குறித்த சந்திப்பு இருந்தது என இருதரப்பும் கூடியுள்ளது.
அமெரிக்கர்களின் நலன்களையும், மாண்புகளையும் கட்டிக்காப்பதில் உறுதியாய் இருக்கப்போவதாகச் சீனாவிடம் தெளிவுபடுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதேசமயத்தில், தைவான் நீரிணை விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, தைவான் நீரிணையில் சீனப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்கக் கப்பலின் வழியில் குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.
மோதலைத் தவிர்க்க அமெரிக்கக் கப்பல் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தது.
இந்த விடயம் குறித்து இருதரப்பு பிரதிநிதிகளின் சந்திப்பில் பேசப்பட்டதா என்பது வெளியாகவில்லை.