;
Athirady Tamil News

பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1.5 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வரத்து!!

0

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம். அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை அதிகமாக பயன்படுத்தும்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவதும், தண்ணீர் பயன்பாடு குறைத்துக்கொண்டால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாவதுமாக உள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மே 4-ம் தேதி முதல் இன்று காலை வரை 1.467 டி எம் சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.68 அடி ஆக பதிவானது. 1.666 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 500 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.