;
Athirady Tamil News

நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் மோடி: ஆம் ஆத்மி தாக்கு!!

0

மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் டுவிட்டரில் கூறியதாவது:- நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் நரேந்திர மோடி.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவாதம் அளித்த 2 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார். இன்று அனைத்து டி.வி. சேனல்களும் பிரதமர் மோடியை கண்டிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.