;
Athirady Tamil News

உக்கிரமடையும் போர்ச்சூழல் – புடினை கொல்ல துடிக்கும் உலக நாடுகள் !!

0

ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே போர் உச்சம் தொட்டு வருகிறது. போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இதற்கிடையே ரஷ்யாவில் உள்நாட்டு முறுகல் ஏற்பட்டு, சில மணி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியது.

உக்கிரமடையும் போர்ச்சூழல்

இந்நிலையில், ரஷ்யா மட்டுமே என்னை கொலை செய்ய விரும்புகிறது. ஆனால், உலகமே புடினை கொலை செய்ய எதிர்பார்க்கிறது என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

வாக்னர் வாடகை படையை சேர்ந்த 21 ஆயிரம் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் இதனால் வாக்னர் வாடகைப்படை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜினின் கிளர்ச்சியில் போது ரஷ்யா பெரிதும் பாதிக்கப்பட்டது. இது உக்ரைனின் எதிர் தாக்குதலுக்கு பயனளிக்கும். எதிரிகளை எங்கள் நிலத்திலிருந்து வெளியேற்ற இந்த சூழ்நிலை பெரிதும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.