;
Athirady Tamil News

நாகப்பாம்பின் வாலை பிடித்து விளையாடிய 6 வயது சிறுவன்!!

0

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ராஜநாகம் ஒன்றின் வாலை பிடித்து பயமின்றி சிறுவன் ஒருவன் விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டரில் சுபாஸ் சந்திரா என்ற பயனர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் 6 வயது சிறுவன் ஒருவன் மிகவும் நீளமான நாகப்பாம்பின் வாலை பிடித்துள்ளார்.

அந்த பாம்பு சிறுவனுடன் விளையாடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் இது மிகவும் ஆபத்தானது. ஒரு நொடியில் கடித்து விடும் என எச்சரித்துள்ளார். மற்றொரு பயனரின் பதிவில், இது மிகவும் முட்டாள் தனமான செயல். இதை அனுமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.