;
Athirady Tamil News

சீனாவில் பள்ளியில் கத்திக்குத்து- 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!!

0

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில், 3 குழந்தைகளும் அடங்குவர். மீதமுள்ள பலியானவர்களில் ஒருவர் ஆசிரியர் என்றும் மற்றும் 2 பேர் பெற்றோர்கள் எனவும் கூறப்படுகிறது. இச்சமபவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக வூ என்ற குடும்பப்பெயர் கொண்ட 25-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 07:40 மணியளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் இறக்கிவிட்டுச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் கொல்லப்பட்ட நபர்களில் ஒருவரின் கார் இப்போது கத்திக்குத்து நிகழ்த்தியவரின் குழந்தையை மோதியுள்ளது என அடையாளம் தெரியாத சாட்சி ஒருவர் கூறியிருப்பதாக தெரிகிறது. வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை. சீனாவில் வன்முறை குற்றங்கள் அரிதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர். 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு நிகழ்வில், தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், கத்தியால் தாக்கிய ஒரு நபரால், 37 மாணவர்களும், 2 பெரியவர்களும் காயமடைந்தனர். 2021ல் குவாங்சி பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஒரு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என இந்த சம்பவங்களை ஆராய்பவர்கள் கூறுகின்றனர். அனேகமாக இச்சம்பவங்களில் கத்தியே பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் பெரும்பாலான துப்பாக்கிகள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.