;
Athirady Tamil News

கடும் பொருளாதார நெருக்கடி – போர் விமானங்களை விற்கிறது பாகிஸ்தான் !!

0

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், தான் வாங்கிய போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து உதவி செய்தபோதிலும் அந்நாட்டின் நிதி மீண்டு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்களை பாகிஸ்தான் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலையில் தற்போது அந்த போர் விமானங்களை ஈராக் நாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளது.

1.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் போர் விமானங்களை விற்பனை செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் போர் விமானங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தில் கூட பாகிஸ்தானின் பொருளாதாரம் மீளாது என்று அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.