;
Athirady Tamil News

சொந்த இடத்தில் கோவில்: தலித்கள் நுழைய தடை என போர்டு வைத்தவர் கைது!!

0

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குக்சி தாலுகாவிற்கு உள்பட்ட ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் பிரஹ்லாத் விஷ்வகர்மா. இவர் தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அதோடு, தலித்கள் கோவிலில் நுழைவதற்கு கண்டிப்பாக தடைவிதிக்கப்படுகிறது என்ற போர்டும் எழுதி வைத்துள்ளார். இதனால் தலித் சமூதாயத்தினர் மற்றும் பீம் ஆர்மி ஆர்வலர்கள் கோவில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தினர். பின்னர், பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் பிரஹ்லாத் விஷ்வகர்மாவை கைது செய்துள்ளனர். பின்னர் பிரஹ்லாத் பொது மன்னிப்பு கேட்டதுடன், அந்த போர்டை அகற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.