;
Athirady Tamil News

துன்னாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.