;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பேரிடி..! ஒரேநாளில் தக்க பதிலடி கொடுத்த உக்ரைன் !!

0

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் மக்கிவ்கா நகரங்கள் மீது மீது உக்ரைன் ஆயுத படை நேற்று தாக்குதல் நடத்தியதாக சுதந்திர பகுதியாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின்(DPR) கூட்டுக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாககுதலுக்கு உக்ரைனிய படைகள் 155மி.மீ கலிபர் குண்டுகளை பயன்படுத்தியதாக டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து தானியங்களை விநியோகம் செய்யும் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதை அடுத்து இருநாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகமாக காணப்படுகிறது.

கடந்த காலங்களில் ரஷ்யாவிற்கு தடுப்பு தாக்குதலை நடத்தி வந்த உக்ரைன் இராணுவ படை, மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான ஆயுத உதவியை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ரஷ்ய படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருவதுடன் ரஷ்யா தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.