;
Athirady Tamil News

கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!

0

புதுவை சாரம் ஜீவா சிலை சதுக்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செய லாளர் ராஜாங்கம் ஆகி யோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்டு தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 2 கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சுப்பையா, அந்தோணி, ராமச்சந்திரன், பிரபுராஜ், சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். கீழ்த்தரமான அரசியலை கைவிட வேண்டும். வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வேண்டும். பெண்களை நிர்வாணப் படுத்தி கூட்டு பாலியல் செய்த மனித மிருகங்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.