;
Athirady Tamil News

சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

0

வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இன்று (26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தின் போது, ​​வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.