;
Athirady Tamil News

தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு ; கொலை என சந்தேகம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடைப்பதனாலும் , சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாக காணப்பட்டமையால் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுவிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழப்பு – இறப்பில் மர்மம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.