;
Athirady Tamil News

வவுனியாவில் சீனித் தொழிற்சாலை; எனக்கு தெரியாது வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் !!

0

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைகள் காணி கொடுப்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆளுநரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் ‘சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது’ இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு தெரியாது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.