;
Athirady Tamil News

சந்திரயான் 3 விண்கலம் – நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வெற்றி!!

0

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத் தொடங்கியது. சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, சந்திரயான் 3 எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும். இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதல் கட்ட பணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9-ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.