;
Athirady Tamil News

நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய யுவதி !!

0

ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்த அதிசய சம்பவம் நடந்தேறியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஜூலை 29ஆம் திகதி நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் ஏழாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். சுமார் 21 மீட்டர் உயரத்தில் இருந்து அவர் விழுந்த நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து படுகாயமடைந்த யுவதியின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில், தனது மகள் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.