;
Athirady Tamil News

விரைவில் வருகிறது புதிய தடுப்பூசி !!

0

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் திரிபான எரிஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், புதிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் வெளிவர உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது.

ஒமிக்ரான் மாறுபாட்டை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதாக எரிஸ் கருதப்படுவதுடன், இது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களையும் பாதிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வயதானவர்கள் மற்றும் ஏனைய அதிக ஆபத்துள்ள நோயுடைய நபர்களை இலக்காகக் கொண்டு வருடாந்த தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என சில அமெரிக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்,

எனினும், இலங்கையில் தற்போதைக்கு எவ்வித கொரோனா தடுப்பூசிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.