;
Athirady Tamil News

பாகிஸ்தான்: குர்ஆன் அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்தவ இளைஞர்கள் – தேவாலயங்கள் மீது தாக்குதல்!!

0

குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

ஃபைசலாபாத்தின் ஜரன்வாலா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவ குடியிருப்பைப் போாராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். தேவாலயம் ஒன்றுக்கும் தீ வைத்த அவர்கள், சில அரசு கட்டடங்களையும் அடித்து நொறுக்கினர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, எஸ்சா நாக்ரி என்ற பகுதியில் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து காலை முதல் அங்கு போராட்டங்கள் வெடித்தன.

ஜரன்வாலா நகர காவல் உதவி ஆணையர் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் தொலைபேசியில் கூறும்போது, “இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை, எஸ்சா நாக்ரியில் போராட்டத்தில் இறங்கிய ஒரு கும்பல் தீவைப்பு சம்பவத்திலும் ஈடுபட்டதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

கைகளில் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

கைகளில் உருட்டுக் கட்டை உள்ளிட்டவற்றை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாகவும் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் கூறினார்.

“வெளியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் அலுவலகத்துக்குள் வைத்து நாங்கள் பூட்டப்பட்டோம்,” என்று எஸ்சா நாக்ரி நகர துணை காவல் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளையும் போராட்டக்காரர்கள் அடைத்து உடைத்தனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

நகரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கிறிஸ்தவ இளைஞர்கள் இருவர் மீது ஜரன்வாலா நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எஸ்சா நகரியில் குர்ஆன் நூலின் பக்கங்களில் சிவப்பு மை நிரப்பப்பட்ட பேனாவால் அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாக, புகார் அளித்தவர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டவர்களாகக் கருதிய நபர்களைப் பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ‘குர்ஆனை நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்’ என்று ஃபைசலாபாத் போலீசார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ’பொதுமக்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ எனவும் அந்த ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பிஷப் ஆசாத் மார்ஷல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தேவாலயங்களின் தலைவரான பிஷப் ஆசாத் மார்ஷல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜரன்வாலாவில் உள்ள கிறிஸ்தவ சமூகம் துன்புறுத்தப்பட்டுள்ளது. ஒரு தேவாலய கட்டடம் எரிக்கப்பட்டுள்ளது. பைபிளும் அவமதிக்கப்பட்டுள்ளது,” என்று பிஷப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்டத்தை அமல்படுத்துபவர்களிடம் இருந்து நாங்கள் நீதியையும், நீத்கக்கான செயல்களையும் எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.