;
Athirady Tamil News

மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு!!

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அவரது குறித்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.