;
Athirady Tamil News

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா !!

0

யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இரு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்யாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வெடி பொருட்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 240 முதல் 375 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த வெடி மருந்துகள், அடுத்த வாரம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யுரேனியம் அடங்கிய வெடி பொருட்களை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க முதன்முறையாக யுரேனியம் அடங்கிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.