;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண்!!

0

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.

காவல்துறை நடவடிக்கையால் இதுவரை மொத்தம் 639 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 6 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருந்து வெடிபொருட்கள் மற்றும் ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.