;
Athirady Tamil News

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை நிலை நிறுத்தம்: அமெரிக்கா-மேற்கத்திய நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை!!

0

உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் ‘சர்மட்’ கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை (ஐ.சி.பி.எம்.) ரஷியா தயாரித்தது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தி உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்தது.

இது தொடர்பாக விண்வெளி நிறுவன பொது இயக்குனர் யூரி போரிசோவ் கூறும்போது, சர்மட் ஏவுகணைகள் தனது பணியை செய்வதற்கான கடமையில் வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன சர்மட் ஏவுகணைகள் ராணுவ படையில் இணைக்கப்பட்டு உள்ளது. அவை பன்டுத்துவதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்றார். இது ஆர்.36 ஏவுகணைக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு உள்ளது. சர்மட் ஏவுகணை முதன் முதலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது குறைந்தது 10 முதல் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. சுமார் 116 அடி நீளமும், 220 டன் எடையும் கொண்டதாகும். ஒரு ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகங்கள் கூறும்போது, சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கை அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும், ரஷியா தனது அணுசக்தி தாக்குதல் விருப்பம் இன்னும் மேஜையில் உள்ளது என்ற செய்தியை அனுப்புகிறது என்று தெரிவித்தது.

ஏற்கனவே சர்மட் ஏவுகணை குறித்து ரஷியா அதிபர் புதின் கூறும்போது, இந்த ஏவுகணைகள், ரஷியாவுடன் போரில் ஈடுபடும் முன் உலகையும் எதிரிகளையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சர்மட் ஏவுகணை அதிபயங்கரமானவை என்று கருதப்படுகிறது. தற்போது சர்மட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.