;
Athirady Tamil News

போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்- வீடியோ வைரலானதால் கைது!!

0

போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை பாலத்தில் ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஹம்தர்த் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் முன்னா (வயது 25) என்பவர் நெரிசலில் சிக்கிக்கொண்டார்.

இதனால் போக்குவரத்தை தவிர்க்கும் முயற்சியாக முன்னா நடைபாதையில் ஆட்டோவை ஏற்றி பின்னர் அதை பாலத்தின் மீது ஓட்டிச் சென்றார். இதனால் பாலத்தில் சென்றவர்கள் திகைப்படைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு முன்னாவையும் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.