;
Athirady Tamil News

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியான்மர்

0

நைபிடா,

மியான்மரில் 2021-ல் ராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது முதல் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கிறது. பெண் தலைவர் ஆங் சான் சூகி (வயது 81) சிறைபிடிக்கப்பட்டதால் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதற்கிடையே, வீட்டுக்காவலில் உள்ள சூகியைச் செஞ்சிலு வைச் சங்க பிரதிநிதி சமீபத்தில் சந்தித்தார். இதனை வரவேற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ‘ஆசியான்’ கூட்டமைப்பு, சூகியை நிபந்தனையின்றி முழுமையாக விடுதலை செய்ய வலியுறுத்தியது.

ஆனால், இக்கோரிக்கையை மியான்மர் ராணுவ அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது. சட்டப்படி மட்டுமே விடுதலை சாத்தியம் எனக் கூறியுள்ள அரசு, தங்களுக்கு இனி ஆசியான் சிறப்புத் தூதுவர் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது. சமீபத்திய தேர்தல்கள் மூலம் மக்கள் செல்வாக்கு கிடைத்துவிட்டதாக ராணுவத் தளபதி மின் ஆங் ஹலைங் வாதிட்டாலும், உலக நாடுகள் இத்தேர்தலைப் போலி நாடகம் என விமர்சித்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.