;
Athirady Tamil News

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 88 உணவுகள் படைத்து வழிபட்ட பெண்!!

0

கோகுலாஷ்டமியை முன்னிட்டு மங்களூருவில் பெண் ஒருவர் கிருஷ்ணருக்கு 88 வகையான உணவுகளை படைத்து வழிபட்டுள்ளார். இதுதொடர்பாக மங்களூருவை சேர்ந்த இருதய நோய் நிபுணரான டாக்டர் பி.காமத் என்பவர் தனது டுவிட்டர் பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், கிருஷ்ணருக்கு 88 வகையான உணவுகளை தயாரித்து படைத்த காட்சிகள் இருந்தது. மேலும் டாக்டரின் பதிவில், கிருஷ்ணருக்கு 88 உணவுகளை தயாரித்தவர் என்னிடம் சிகிச்சை பெறும் நோயாளி ஆவார். கிருஷ்ணர் மீதான அந்த பெண்ணின் பக்தியை பற்றி பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.