;
Athirady Tamil News

9 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை: ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

0

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹீராநகர் பகுதியில் வசித்து வந்தவர் சித்து ( வயது 30) ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தனிமையில் வாடி வந்தார். இதனால் அவருக்கு மன அழுத்தமும் ஏற்பட்டது. நேற்று இவர் தனது வீட்டில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் 7 பக்க உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அதில் தான் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனிமையில் வாழ்ந்து வந்ததால் இந்த முடிவை மேற்கொண்ட தாகவும் எழுதி உள்ளார். போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.