;
Athirady Tamil News

அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது – அதிபர் ஜோ பைடன் பெருமிதம்!!

0

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர். ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதம மந்திரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல்மிக்கது என்பதை உறுதிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.