;
Athirady Tamil News

இனி கன்னட மொழியில்தான் வங்கிச்சேவை- அரசாணை கொண்டு வர கர்நாடக அரசு முடிவு!!

0

கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில்தான் சேவைகள் வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது. கர்நாடகாவில் வங்கிகளில் இந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட ஊழியர்கள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மொழி புரிவதில் தகராறு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் கட்டாய கன்னட மொழிக்கான அரசாணையை இன்னும் ஓரிரு தினங்களில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.