;
Athirady Tamil News

கலாசாலை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!!

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

சிவாஜி கணேசன் பற்றி முனைவர் கா.வெ.செ மருது மோகன் எழுதிய ஆய்வு நூல் மற்றும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுமையான தொகுதி, மற்றும் பல நூல்கள் அடங்கிய பொதியை நூலக அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களான விரிவுரையாளர்களான வேல் நந்தகுமார் , தர்ஷினி முத்துராஜா ஆகியோரிடம் கைகளித்தார்.

கலாசாலை அதிபரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்தொகுதியைக் கையளித்த பாலசுப்பிரமணியத்திற்கு பிரதி அதிபர்களான க. செந்தில்குமரன் ,த. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மாலை சூட்டியும் மதிப்பளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.