;
Athirady Tamil News

கனடாவில் சீக்கிய மாணவர் மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்!!

0

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர், ரட்லேண்ட சாலை தெற்கு-ராப்பூர் சாலை கிழக்கு சந்திப்பில், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பு பஸ்சில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் பஸ்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய துணை தூதரகம் கூறும்போது, “சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.