;
Athirady Tamil News

பதுளை உயிரிழப்புகள் தொடர்பில் அச்சமூட்டும் தகவல்!!

0

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆஞ்சியோகிராம் இயந்திரம் இல்லாத காரணத்தினால் இந்த துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பிரதி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர்,

“இந்த இயந்திரம் பதுளை மாவட்டத்தில் ஊவா மாகாண போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இல்லை. ஊவா மாகாணத்தில் உள்ள 1.5 மில்லியன் மக்கள் இந்த இயந்திரத்தின் மூலம் தமக்குத் தேவையான சேவைகளைப் பெற வேண்டுமாயின் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, கராபிட்டிய, நாகொடை, அனுராதபுரம் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டும். மருத்துவமனை தரவுகளின்படி கடந்த வருடத்தில் மட்டும் 2,179 பேர் எமது வைத்தியசாலையின் இருதய பிரிவுக்குள் பிரவேசித்துள்ளனர். மேலும் இவர்களில் 750 நோயாளிகள் மாத்திரமே ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்த முடிந்தது. பதுளை பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு 1,887 பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், 770 பேருக்கு இதயநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் இடம்பெற்ற மரணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, கிட்டத்தட்ட 40%, இதய நோயால் ஏற்பட்டவை.” என்றார்.

இதேவேளை, இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.