;
Athirady Tamil News

தொடர்ந்தும் பொய் பிரசாரம்: அத்துமீறும் பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம் !!

0

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கருத்து வெளியிட்டமைக்கு எதிரான இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்தும் பொய் பிரசாரம் செய்து வருவதாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தெரிவித்து வருவதாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவுக்கு மாத்திரம் உட்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என பெடல் கெஹ்லோட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் அதிகளவான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.