;
Athirady Tamil News

மூன்று மாதங்களாக தொடர் வன்புணர்வு: பாகிஸ்தானில் தந்தையை சுட்டுக் கொன்ற மகள் !!

0

பாகிஸ்தானில் 3 மாத காலமாக தன்னை வன்புணர்விற்குட்படுத்தியமையால் சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டு கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அத்தோடு 14 வயதுடைய சிறுமி தனது தந்தையை தூங்கிங்கொண்டிருந்த போது தலையியே சுட்டுக் கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதோடு விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியதோடு தனது தந்தை தன்னை முன்று மாதங்களாக வன்புணர்விற்கு உட்படுத்தியமையால் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியைச் சேர்ந்த பிலால் கான் என்ற தையல் தொழிலாளி ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.