;
Athirady Tamil News

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பு!!

0

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று(28) இடம்பெற்றது.

அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின்(IDCTE) ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில் , இலங்கை அரசினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் , சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் மனித உரிமை சார்ந்த விடயங்களை , ஐரோப்பிய ஒன்றியமும் . பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும், ரீனா ஜோர்டிக்கா மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து தேசத்தில் தற்போது தங்கி நிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றும் நாளையும் வெளிநாட்டு அமைச்சுப் பிரதிநிதிகளுடனும், அரச, அரச சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பு வாய்ந்த மேலாளர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.