;
Athirady Tamil News

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்களில் பொய்கள் வெளியாகின்றன- மகிந்த!!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.