;
Athirady Tamil News

வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

0

கம்பளை நகரின் ஊடாகச் சென்ற முச்சக்கரவண்டி வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த முச்சக்கரவண்டியில் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்தில் இருந்து கம்பளைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசம்
சுற்றியுள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை மாநகரசபைக்குள் தீயணைக்கும் பிரிவு இன்மையால் தீ விபத்து ஏற்படும் போது பெரும் அழிவு ஏற்படு வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.