;
Athirady Tamil News

ஓபிஎஸ் தலைமையில் 3-வது ஆணை அமைகிறதா..?பண்ருட்டி ராமசந்திரன் தகவல்

0

பாஜக கட்சியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தல் கூட்டணி குறித்து ஆனால் தற்போது தெரிவிக்க முடியாது என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஓபிஎஸ்’ஸின் ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து விவாதகிப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்’ஸின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அக்டோபர் 11ஆம் தேதி தலைமை கழக நிாவாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று தகவல் அளித்தார்.

மூன்றாவது அணி அமைகிறதா..?
தங்கள் அணியில் உறுப்பினர் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மக்களவைத் தோதல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார். அப்பொது செய்தியாளர்கள் கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுப்பிய போது, பாஜக தலைமையுடன் இப்போதும் தொடர்பில் இருந்து வருகிறோம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருவதை குறிப்பிட்ட பண்ருட்டி ராமசந்திரன், தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையில் மூன்றாம் அணி அமையுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.