;
Athirady Tamil News

‘சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக’ – எடப்பாடி பழனிசாமி!

0

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக, என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “தமிழ்நாட்டின், தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்க வேண்டும். அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பவைதான் எங்களின் பிரதான கோரிக்கை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும்போது இதை முன்னிறுத்துவோம்.

வலிமையான கூட்டணி
பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய கட்சிகள் எல்லாமே, அந்ததெந்த மாநில பிரச்சினைகளைதான் அவை முன்வைக்கின்றன. தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும். இந்த நாடாளுமன்ற தேர்தலோடு டிடிவி தினகரன் கட்சி விலாசம் இல்லாமல் போய்விடும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.