;
Athirady Tamil News

யாழில் நீதி கோரி கதவடைப்பு போராட்டம்: யாழ்.வணிகர் கழகம் பூரண ஆதரவு

0

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (07.10.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரும் விவகாரத்துடன் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தீர்வுக்கு முழுமையான சர்வதேச தலையீட்டையும் கோரி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்தப்படவேண்டுமென்றும் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமை போராட்டம்
தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த எந்த நடவடிக்கைக்கும் பரிபூரண ஆதரவை வழங்கி வரும் பாரம்பரியத்தையுடைய யாழ்ப்பாண வணிகர் கழகம், இந்த போராட்டத்தையும் முழுமையாக ஆதரிப்பதாக வணிகர் கழகத்தினர் தெரிவித்தனர்.

எனினும் நீதிபதி விவகாரத்துடன், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு, முழுமையான சர்வதேச தலையீட்டையும் கோரி இந்த சுதவடைப்பு போராட்டம் நடந்தப்பட வேண்டு மென்றும் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

போராட்ட அறிவிப்பில் இந்த கோரிக்கையும் இணைக்கப்பட வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களது கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.

இதேவேளை, நீதிபதி சரவணராஜாவை கொச்சைப்படுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வணிகர் கழகத்தினர் வலியுறுத்தினர்.

தமிழீழ விடுதலை இயக்க தலைவர் தசித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.