;
Athirady Tamil News

இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடங்கள்: கல்விச் செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கட்டிடங்களில் கல்விகற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களில் புதிய கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சில முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், சில கட்டிடங்கள் புனரமைக்கப்படும் நிலையில் இருப்பதாகவும், உலக வங்கியின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்ட பணம் ஒதுக்கப்படும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு மாதங்களில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண கல்விச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இடிந்து வீழ்ந்த சில கட்டிடங்கள் 50 முதல் 60 வருடங்கள் பழமையானவை எனவும், கடந்த காலங்களில் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவ்வாறான கட்டிடங்களை சீர்செய்வதில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவித்த செயலாளர் செலுத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற அழிவு ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.