;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’

0

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (08-10-2023) காலை 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.

குறித்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர்.

இதன்போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இந்த கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டினம் காங்கேசன்துறை இடையே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமாக 27,000ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.