;
Athirady Tamil News

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் வன்முறையும், மோதல்களும் வலுத்து வரும் நிலையில் மேலும் ஒரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இதுவரை காணாமல் போன இலங்கையர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவலின்படி, இலங்கை பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலதிக உதவிக்காக
காயமடைந்த நபர் அப்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்து வந்தவர் என்று கூறப்படுகிறது.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், அவர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிப்பதாக கூறுகின்றது.

அவ்வாறு தகவல்களை பெற முடியாமல் போய்விட்டால் மேலதிக உதவிக்காக அவர்களின் விபரங்கள் செஞ்சிலுவைச் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.