;
Athirady Tamil News

திண்டாட்டத்தில் சீனா: உலகளாவிய ரீதியில் பாதிப்பு

0

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக கூறியுள்ளது.

இந்த பிரச்சினை கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாதிப்பு
மேலும், இந்த நிலை ஏற்படுவதற்கான காரணம் அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே ஆகும்.மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது.

அத்தோடு, ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னமும் காணப்படுகிறது.

அதேவேளை, விக்டோரியா பல்கலைக்கழகத்தின் அறிக்கையில், சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.