;
Athirady Tamil News

லண்டன் விமான நிலையத்தில் பயங்கர தீ: விமானங்கள் ரத்து

0

லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தீ பயங்கரமாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

லண்டன் விமான நிலையத்தில் பயங்கர தீ
லண்டனிலுள்ள Luton விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கில் நேற்றிரவு தீப்பற்றியுள்ளது. பயங்கரமாக பற்றியெரிந்த தீயில், கார் பார்க்கிங்கின் முதல் தளத்தில் 80 சதவிகிதம் நாசமாகிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

நேற்றிரவு 8,47 மணியளவில், விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கில் தீப்பற்றியதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ள தீயணைப்புத்துறையினர், ஏராளமான கார்கள் நாசமாகிவிட்டதாகவும், ஆனாலும், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

விமானங்கள் ரத்து
தீ விபத்து காரணமாக, Luton விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எக்ஸில் தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், இப்போது யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.