;
Athirady Tamil News

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

0

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (11) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அக் கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது.

103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.